73வது சுதந்திர தின நிகழ்வுக்கு இணைவாக இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 337 இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் ஏனைய தர அதிகாரிகள் 8 ஆயிரத்து 266 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளது.