சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து ஆராய பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதனையடுத்தே சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் அது தொடர்பான காண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்ப்பட்ட 52 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 905 பேர கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.