தன்னைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைப்பதை தடுக்குமாறு கோரி ஷாணி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மார்ச் 31 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை வழக்கில் போலி சாட்சியங்களை தயார் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தான் தற்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறு சிறை வைப்பதற்கான எவ்வித சாட்சியங்களும் இல்லையென அவர் குறிப்பிடுகின்றார். அதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பாணிப்பாளர் ஷாணி அபேசேகர தாக்கல் செய்துள்ள மனுவை மார்ச் 31 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
000
10 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கனகசபை ரஞ்சனை அக்குற்றச்சாட்டுக்களிலிருந்து முழுமையாக விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2012 ம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தை மையப்படுத்தி இவ் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.