2021ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் கைச்சாத்திடும் நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குள் முன்னெடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளர் பெயர் பட்டியலில் மீள் திருத்தம் செய்வதற்கான 80 வீத பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி பு.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
பெயர் பட்டியல் திருத்தம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாத்திரம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி பு.புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.