சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்திய விமான சேவைக்குறிய விசேட விமானம் ஒன்றின் ஊடாக அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாக நோக்கி பயணித்துள்ளனர். இந்திய மீனவர்களை விடுதலை செய்வது குறித்து அந்நாட்டு அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைகளுக்கமைய அது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.