இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் முகநூல் ஊடாக தகவல்களை பரிமாறியதாக கூறப்படும் நபரை உடனடியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹார் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
பசால் மொஹமட் நிசார் எனப்படும் இந்நபர் இச்சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்தில் விளக்கமளித்த போது தனியார் வங்கியொன்றில் உள்ள சந்தேக நபரின் கணக்கின் ஊடாக பெருந்தொகை பணம் சந்தேகத்திற்கு இடமான முறையில் புழக்கத்தில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 90 நாட்கள் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிப்பதற்காக பாதுகாப்பு செயலாளரினால் தடுத்து வைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் சந்தேக நபரை தமது பொறுப்பில் வழங்குமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு உத்தரவிடுமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தை கோரியிருந்தனர்.