அறுவடைகளை மேற்கொள்வது தொடர்பில் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்றுமுதல் எதிர்வரும் 24ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மழைகொண் வானிலை குறைவடையுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனால் குறித்த காலப்பகுதியில் அறுவடைக்கு தயாராகவுள்ள பயிர்களை அறுவடைசெய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ம் திகதிக்கு பின்னர் வடக்கில் மழை நீடிக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் தமது விளைச்சல்களை பாதுகாக்கும் வகையில் அறுவடைக்கு தயாராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.