பெப்ரவரி மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியில் ஒருதொகுதி நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்பினருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும். சுகாதாரப் பிரிவுடன் தொடர்புடையோர், முப்படையினர், பொலிசார் உட்பட கொவிட் 19 ஒழிப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. மார்ச் மாதமளவில் குழுக்களின் அடிப்படையில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.