பொது சுகாதார பரிசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்தி பதுளை பகுதியில் நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதுளை நகரிலுள்ள உணவகமொன்றுக்கு சென்ற சந்தேக நபர்கள், அங்கிருந்த ஊழியர்கள் சுகாதார வழிமுறைக்கமைய செயற்படவில்லையென குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதனையடுத்து ஊழியர்களுக்கு மருத்துவ சான்றிதழ் பெற வேண்டுமெனவும் , அதற்கென 45 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்தப்படவேண்டுமெனவும் அவர்கள் குறிபபிட்டுள்ளனர். இதற்கமைய 5 தொலைபேசி இலக்கங்களிலிருந்து ஈசிகேஸ் மூலம் பணம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள். இத்தகைய நிதிமோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.