சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆயிரத்து 128 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை மஞ்சளை எடுத்துச்செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.