இம்முறை பெரும்போகத்தில் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தை ஸ்த்தாபித்தல், பத்திரிகை சபை சட்டமூலத்தை மறுசீரமைத்தல் உள்ளிட்ட மேலும் பல யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது.
நெல் விலை எதிர்பாரா வண்ணம் வீழ்ச்சியடைவதை குறைக்கும் நோக்கில் உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்தது. நெற் சந்தைப்படுத்தும் சபை ஊடாகவே இந்நடவடிக்கை எடுக்கப்படும். உரமானியம் கிடைக்கின்ற விவசாயிகள் செய்கை பண்ணும் நெல்லின் அளவுக்கு ஏற்ப நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.