கிழக்கு மாகாணத்தில் தரிசு நிலக் காணிகளில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை எதிர்பாரத விளைச்சலை தந்துள்ளதாக நிலக்கடலை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையின் நிலக்கடலை அறுவடை இறக்கமாம் குடுவில் பகுதியில் இடம்பெற்றது. இறக்காமம் கமநல சேவை பிரிவில் சுமார் 25 ஏக்கரில் நிலக்கடலை மேற்கொள்ளப்பட்டது. இம்முறை அதிகூடிய விளைச்சல் கிடைத்தமையினால் விவசாயிகள் கூடிய இலாபத்தை பெற்றுள்ளனர். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பல குடும்பங்கள் இதனால் நன்மையடைந்துள்ளனர்.