சர்வதேச நடவடிக்கைகளுக்கென விமான நிலையம் எதிர்வரும் 22ம் திகதி முதல் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமான சேவைகளுக்கெனவும் ஜனவரி 22 ம் திகதி முதல் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அவதானம் செலுத்தி , சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின்கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா குறிப்பிட்டுள்ளார்.