சீனாவின் வூஹான் நகரில், அவசரகால தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. சீனா தயாரித்த, 11 தடுப்பூசிகள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நிலையில் அவசரகால தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ளது. ஹபெய் மாகாணத்தின், 15 மாவட்டங்களிலுள்ள, 48 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 முதல் 59 வயது வரையான குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம், அவசரகால தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாக, வூஹான் நகர நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு, ஒரு மாத காலத்திற்குள், மேலும் இரண்டு, டோஸ் மருந்துகள் செலுத்தப்படுமென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.