மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு தொடர்ந்தும் ரெபீட் என்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த 18ம் திகதி முதல் இதுவரை 10 ஆயிரம் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 61 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரெபீட் என்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். அதை அனைவரும் தமது பொறுப்பாக எண்ணி செயற்பட வேண்டும். எவருடனும் காணப்படும் தனிப்பட்ட கோபத்திற்காக அல்ல. எவரேனும் நோயளாராக இருந்தால் அவரை அடையாம் கண்டு சிகிச்சையிப்பதோடு, தொற்று ஏனையோருக்கு பரவுவதிலிருந்து தடுப்பதே இதன் பிரதான நோக்கமென பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.