சிறைச்சாலைகளுக்கென புதிய கட்டுப்பாட்டாளர்களை இணைத்துக்கொள்ளும் நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் ச்சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கென விண்ணிப்பித்தவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவை கிடைக்கப்பெறாதவர்கள் சிறைச்சாலை திணைக்களத்தின் றறற.pசளைழn.பழஎ.டம இணையளத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை வாரியபொல, அங்குனுகொலபெலஸ்ஸ , இரத்தினபுரி, பல்லேகல, பொலன்னறுவை, ஆகிய ஆறு மத்திய நிலையங்களில் நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது. சிறைச்சாலைளுக்கென 955 புதிய கட்டுப்பாட்டாளர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் ச்சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.