இந்தியாவின் டெல்லியில் தொடர்ந்தும் 16 ஆவது நாளாகவும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசாங்கத்தின் வேளாண்மை சட்டங்களை மீளப்பெறக்கோரி கடந்த மாதம் 26ம் திகதி போராட்டம் ஆரம்பமானது. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடுமையான பனிக்கு மத்தியிலும் திறந்த வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தமக்கு உரிய தீர்வு கிட்டாவிடின், டெல்லிக்கான அனைத்து சாலைகளையும் மூடவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை போராட்டக்காரர்களுக்கும், மத்திய அரசாங்கத்திற்குமிடையில் 5 சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள போதும், இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லையென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.