லங்கா பிரிமியர் லீக் போட்டி தொடரின் கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் தம்புளை வைகிங் அணிகளுக்கு இடையில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் 4 விக்கட்டுக்களினால் தம்புளை வைகிங் அணி வெற்றி பெற்றது. இதேவேளை ஜப்னா ஸ்டேலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணி ஆறு விக்கட்டுக்களினால் வெற்றிப் பெற்றது. கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் தம்புளை வைகிங் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற வைகிங் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு கிளேடியேட்டர்ஸ் அணிக்கு அழைத்பு விடுத்தது. கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 33 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஹசன் அலி ஐந்து ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் முதல் விக்கட்டை இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி ஏழு விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புளை வைகிங் அணி ஓட்டங்களை பெறுவதற்கு முன்னர் போல் ஸ்டேலின் ஆட்டமிழந்தார். நிரோஷன் திக்வெல்ல 38 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். 4 பவுண்டரிகளுடன் ஆறு சிக்சர்களுடனும் எஞ்சலோ பெரேரா 45 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். சமின் உல்லா ஷின்வாரி இரண்டு சிக்சர்களையும் ஆறு பவுண்டரிகளையும் விளாசி 46 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். போட்டியின் இறுதி ஓவரின் இறுதி பந்துவீச்சில் ஒரு ஓட்டத்தை பெற வேண்டிய நிலையின் சமின் உல்லா ஷின்வாரி சிக்சர் ஒன்றை விளாசி போட்டியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
அரையிறுதிக்கு பிரவேசிக்க வேண்டியதாயின் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு இன்று நடைபெறவுள்ள போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக காணப்படுகின்றது. ஜப்னா ஸ்டேலியன்ஸ் கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புளை வைகிங் அணிகள் லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்;டி தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அத்துடன் எல்.பி.எல் போட்டித் தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன் முதலாவது போட்டியாக கொழும்பு கிங்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டேலியன்ஸ் ஆகிய அணிகள் இன்று மாலை 3.30ற்கு போட்டியிடவுள்ளன. இரண்டாவது போட்டியாக கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோதவுள்ளன. போட்டிகளை சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் வசந்தம் ரிவி ஊடாக கண்டுகளிக்க முடியும்.