எவ்வழியிலேனும் இலஞ்சம் கோருபவர்களுக்கு எதிராக செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலஞ்ச ஊழல் கலாசாரத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினருக்கு சிறந்ததொரு நாட்டை உருவாக்கி கொடுப்பதற்காக அணி திரளுமாறு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை ஒட்டி வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடியானது அபிவிருத்திக்கு பாரிய தடையாக காணப்படுகிறது. எத்துறையாயினும் ஊழல் மோசடியானது நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் தடைகளை ஏற்படுத்துகின்றன. ஊழலுக்கு எதிராக சிறந்த முறையில் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கு எதிராக முகம் கொடுப்பது நாட்டு மக்கள் அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டு மக்கள் இதனை சிறந்த முறையில் விளங்கி பொறுமையுடன் செயற்படுவார்களாயின் ஊழலை முற்றுமுழுதாக தோற்கடிக்க முடியும்.
ஊழலுக்கு எதிராக நாட்டு மக்களை பலப்படுத்துவதற்கு சுபீடசத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் கூட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வீண் விரயம் ஊழலை எதிர்த்தல், போன்றன தமது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாக காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அரச துறையின் மூலம் செயற்திறன் மிக்க சேவையை பெற்றுக்கொள்ளும் உரிமை குறித்து பொதுமக்கள்ள அறிந்திருக்க வேண்டும். அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து பொதுமக்கள் சிறந்த முறையில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இலஞ்சம் பெறுபவர்கள் குறித்து பொதுமக்கள் கூடிய அவதானத்துடன் செயற்படுவது நாட்டு பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்குரிய பாரிய பொறுப்பாக அமைவதாகவும் ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.