சகல சிறைச்சாலைகளிலும் நாளாந்தம் முன்னெடுக்கப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனை அளவை அதிகரிப்பதற்கும் அதனை துரிதப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தலைமையில் இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர் , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பல அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிறிய குற்றங்கள் தொடர்பில் சிறைவைக்கப்பட்டுள்ள விடுவிக்கப்படக்கூடிய கைதிகளுக்கு விரைவில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் பின்னர் சமூகத்தோடு இணைக்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.
சிறைச்சாலையில் உள்ள கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளை ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு தேவையான சுகாதார வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.