நேற்றைய தினம் நாட்டில் மேலும் 628 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கி பழகியவர்களென இராணுவ தளபதி, லெப்டினன் ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியாகொடை கொரோனா கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது. மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 38 ஆக உயர்வடைந்துள்ளது. அதில் 19 ஆயிரத்து 32 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். 6 ஆயிரத்து 877 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதோடு, 433 பேர் விசேட வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.