கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இயக்கச்சி பனிக்கையடி கிராமத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் சில இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த 29, 35, 62, 67 வயதுடைய நால்வர் கைதாகியுள்ளனர். அவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.