கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து இன்று வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 410 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். 124 மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளன. இந்நிலையில் 6 ஆயிரத்து 254 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.