வரவு செலவு திட்டம் மீதான 8ம் நாள் குழுநிலை விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்று வருகிறது. காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகின. இன்றைய தினமும் பல்வேறு அமைச்சுக்கள் தொடர்பான விவாதம் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாத்தில் கொரோனா அவதான நிலை காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. சில பகுதிகளில் பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் சமநிலை தன்மை இல்லாமல் போயுள்ளது. ஒரு சில பாடசாலைகளில் பாடத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்ட போதும், சில பாடசாலை மாணவர்களால் அதனை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது. இது அசாதாரணமாகும். கண்டிப்பகுதியில் சுமார் 190 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அனைவருக்கும் சமத்துவத்தை ஏற்படுத்த அரசாங்கம் எத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதென பாராளுடன்ற உறுப்பினர் சமிந்த விஜயறிசி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பிரீஸ் அதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தர். நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளையும் மூடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. நூற்றுக்கு 50 வீதமான மாணவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். ஏனைய பாடசாலைகளையும் திறப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை இலத்திரணியல் கல்வி குருகுல கல்வி சேவை உள்ளிட்ட நடவடிக்கைகளின் ஊடாகவும் மாணவர்களுக்கான கல்வி போதனைகளை வழங்கும் நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கசம்பூரன தீர்வொன்று எட்டப்படுமென ;வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பிரீஸ் தெரிவித்தார்.