அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைக்கும்போது அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு குறித்த விடயம் தொடர்பில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக அரசசேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அரச நிறுவனங்களில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஒரு ஊழியர் அல்லது மூன்றுக்கும் மேற்படாத ஊழியர்களை சேவைக்கென அழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த செயற்பாட்டை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மேற்கொள்ளுமாறும் அரசசேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. ஜே ரத்னசிறி அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் அரச நிறுவனங்களின் பிரதானிகள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் அடங்கிய சுற்றரிக்கை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.