சிறுவர்களின் நோயெதிர்ப்புச்சக்தி மற்றும் அவர்களுக்கான போஷணை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. குழந்தைகளின் உடல் எடை அதிகரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் தகவல்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.