சமுத்திர பாதுகாப்பு தொடர்பான நான்காம் கட்ட ஆலோசனை ஒன்று கூடலில் பங்கேற்பதற்கென இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மாலை தீவு பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித்; டொவால் உள்ளிட்ட அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகள் ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு வருகை தந்தனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகர் காரியாலயம் அவர்களை வரவேற்றது.
அதேபோல் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரான மரியா அஹமட் டிடி உள்ளிட்ட 7 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு குறித்த சமுத்திர பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டிற்கு வருகை தந்தனர். இம்மாநாடு கொழும்பில் நடைபெறுகிறது.