ஆர்ஜண்டினா அணியின் முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் டியாகோ மெரடோனாவின் இறுதிச்சடங்கில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். ஆர்ஜண்டினா தலைநகர் புவனஸ் அயர்ஸில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றிணைந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த புதன்கிழமையன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக டியாகோ மெரடோனா உயிரிழந்தார்.
அதனைத்தொடர்ந்து மூன்று தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ஜண்டினாவின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதோடு, ஆர்ஜண்டினா ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் மெரடோனா அணிந்து விளையாடிய 10ம் இலக்க ஜேர்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.