சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழத்தை கொரோனா அச்சுறுத்தல் நீங்கியதன் பின்னர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதனை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று 3 வது நாளாக சாட்சியமளித்தார். இப்பல்கலைக்கழகத்தின் முப்பரிமாண ஒளித்திரை ஊடாக ஆணைக்குழுவில் சாட்சியாளர் காட்சிப்படுத்தினார். பெட்டிகலோ கெம்பஸ் என்பது ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். கிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காகவே நான் இதனை நிர்மாணித்தேன். இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்த்pயடைந்த பின்னர் ஆசியாவில் மிக பெரிய பல்கலையாக இது மாறும். 100 ஏக்கர் காணியில் இது நிர்மாணிக்கப்படவிருந்தது. இங்கு 3000 மாணவர்களுக்கு கல்வி பயில முடியும். நிர்மாண பணிகள் பூர்த்தியடைந்த பின்னர் சுமார் 10 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வியை பெற முடியும். இதற்கு சவுதி அரேபிய சமூக சேவை அமைப்பொன்று 3.6 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்ய 18 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்;.
அரபு கட்;டட கலை இதற்கு ஏன் பயன்படுத்தப்பட்டது என அரச சிரேஸ்ட சட்;டதரணி வினவினார். அரபு கட்டட கலையன்றி இஸ்லாமிய கட்டட கலை இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக திரு ஹிஸ்;;புல்லா தெரிவித்தார். ஷரியா சட்டத்தை போதிக்கும் ஒரு பாடநெறி இங்குள்ளதா என அரச சட்டதரணி வினவிய போது ஆரம்பத்தில் அவ்வாறான நோக்கம் இருந்ததாகவும் 10 பாடங்களில் 2 பாடங்கள் ஷரியா சட்;டம் தொடர்பானது என்றும் அதற்கு உயர் கல்வியமைச்சின் அங்கீகாரம் தேவையென்றும் பின்னர் நாம் அதனை 8 பாடங்களாக குறைத்ததாகவும் அவர் பதில் அளித்தார். இப்பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கு உதவியா அல்லது கடனா கிடைத்தது என கேள்வியெழுப்பப்பட்;ட போது அதற்கு பதில் அளித்த சாட்சியாளர், 18 ஆண்டுகளில் அந்த பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான கடனாகவே அது பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். பொதுவாக கடன் ஒப்பந்தங்களை செய்யும் போது சாட்சியாளராக வெளி தரப்பொன்று கைச்சாத்திட வேண்டுமல்லவா என ஆணைக்குழு வினவியது. அத்துடன் கடனைச் திருப்பிச் செலுத்த தவறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமென்பது தொடர்பாக இவ்வொப்ந்தத்தில் குறிப்பிடப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சாட்சி, இஸ்லாம் என்பது இறைவனின் பெயரால் ஒரு நம்பிக்கையின் பேரில் செய்யப்படும் ஒப்பந்தம் என்றும் அதனால் எழுத்துமூல ஒப்பந்தம் ஒன்றில் அது பிரச்ச்pனையாக அமையாது என்றும் அவர் தெரிவித்தார்.