வடக்கில் மக்களுக்கு இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் மாவீரர் தின நிகழ்வுகளுக்காக இடமளிக்கப்போவதில்லையென பொலிசார் வலியுறுத்தினர். இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
“இன்றும் நாளையும் வட, கிழக்கு பகுதிகளில் உயிரிழந்த எல்.ரி.ரி. பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர். எவ்வாறாயினும் இதற்கு நீதிமன்றத்தினால் தடை யுத்தரவொன்றை பெற்றுக்கொள்ள பொலிசார் நடவடிக்கை எடுத்தனர். நாட்டில் 30 வருடகாலம் யுத்தத்தில் ஈடுபட்டு அவ்வாறே மூவின மக்களையும் இன ரீதியில் அழித்த பல்வேறு சமயங்களை பின்பற்றியவர்களை அழித்த எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளை நினைவு கூர ஒருபோதும் இடமில்லை. எல்.ரி.ரி.ஈ அமைப்பானது, நாட்டில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். 20 உலக நாடுகளிலும் தடைசெய்யப்பட்டதொரு அமைப்பாகும். எவரேனும் ஒருவரும் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முயற்சித்தால், அதனை தடுப்பதற்கு இலங்கை பொலிஸ் சகல நடவடிக்கைகளையும் எடுக்கும். அவ்வாறே குறித்த நபர்களை கைதுசெய்து சட்டநடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.”