கொரோனா நிலைமைக்கு முகம் கொடுத்து நாட்டை முன்னெடுத்து செல்லப்போவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கு அமையவே எதிர்கால திட்டங்கள் வகுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா முதலாவது அலையை விட இரண்டாம் அலை மாறுபடுவதனால் 78 இலட்சம் குடும்பங்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறாயினும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் முடக்கப்படவில்லையென அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
மிகப் பெரிய முதலீடான ஹம்பாந்தோட்ட டயர் கைத்தொழிற்சாலையின் நிர்மாண பணிகுறித்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப்பட்;டமை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். வீடமைப்பு மற்றும் குடிநீர் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. கருத்து முரண்பாடுகளை தவிர்த்து கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சகல தரப்பினரும் ஒன்றாக இணைந்து நாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் சுட்டிக்காட்டினார். கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் எசரத்ன, பல்கiலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேரசிரியர் சம்பத் ஆகியோரும் இவ் ஊடக சந்திப்பில் இணைந்திருந்தனர்.