மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் 3ம் தவணைக் கல்விக்கென இன்று திறக்கப்பட்டன. 6ம் தரம் முதல் 13ம் தரம் வரையான வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். உச்ச கட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பாடசாலைகளை திறப்பதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில சீ பெரேரா தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும்போது பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். தொற்று பரவல் ஏற்படுமென்ற அச்சத்தில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம். உரிய சுகாதார வழிமுறைகளை தமது பிள்ளைகள் பின்பற்றுவதற்கான வழிகாட்டல்களை பெற்றோரும் வழங்கவேண்டுமென கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.