நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கொழும்பு நகர வீடமைப்பு தொகுதிகளில் தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோதர மெத்சந்தசெவன வீடமைப்பு தொகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த செயற்பாட்டில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கலந்துகொண்டார்.