கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கத்தியாகியிருந்த மேலும் 93 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். சீனாவின் குவாங்சோவிலிருந்து 4 பேரும், அபுதாபியிலிருந்து 5 பேரும், தோஹா கட்டாரிலிருந்து 39 பேரும், ஓமானின் மஸ்கட்டில் இருந்து 30 பேரும், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து 13 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.