சமிக்ஞை விளக்குகளுக்கு அருகாமையில் கையேந்தும் யாசகர்கள் காரணமாக கொவிட் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி அஜித் ரோகன தெரிவித்துள்ளார். வாகனங்களை செலுத்தும் போது இதுகுறித்து கருத்திற் கொள்ளுமாறு அவர் சாரதிகளை கேட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள சமிஞ்சை விளக்குகளுக்கு அருகாமையிலுள்ள யாசகர்களினால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. ஒரு புறம் இவர்களது செயற்பாடுகள் கொரோனா பரவலுக்கும் காரணமாகியுள்ளன. இதனால் இவர்கள் குறித்து விசேட வேலைத்த்pட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் சமிஞ்சை விளக்குகளுக்கு அருகாமையில் காணப்படுகின்ற சகல யாசகர்களும் உண்மையாகவே யாசகர்கள் அல்ல. இவர்களில் பெரும்பாலானவர்கள் முகாமையாளர் ஒருவரின் கீழ் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.
000
தனிமைப்படுத்தப்பட்டுள்ள 24 பொலிஸ் அதிகார பிரிவுகளில் பயணங்களை மேற்கொள்வது முற்றுமுழுதாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஹெலிகப்டர் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் ஊடாக அது குறித்து மக்களின் நலன் கருதி கண்காணிக்கப்பட்டு வருவதாக பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.