உலக பொபி மலர் தினத்திற்கு இணைவாக இலங்கை படை வீரர் சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொபி மலரை அணுவித்தது.
உலகில் பல நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்களின் போது உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் நவம்பர் 11 ம் திகதி உலக பொப்பி மலர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதற்கு இணைவாக இலங்கையில் பொபி மலர் தினத்தை அனுஸ்டிக்கும் நிகழ்வு கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு அருகாமையில் நடைபெறவுள்ளது. இதற்கு இணைவாக பிரதமருக்கு பொபி மலர் அணுவிக்கும் நிகழ்வு விஜயராமையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் இடம்பெற்றது.
பொபி மலர் விற்பனையின் மூலம் கிடைக்கின்ற நிதி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் படை வீரர்கள் சங்கம் இதன்போது பிரதமரிடம் ஒருசில கோரிக்கைகளையும் முன்வைத்தது. இது குறித்து கவனம் செலுத்திய பிரதமர் நிதிய அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிலவுடன் தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி பொபி மலருக்காக சுங்கத்தினால் அறவிடப்படுகின்ற வரியை நீக்குவது குறித்து அறிவித்தார். இலங்கை படை வீரர் சங்கத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் உபுல் பெரேரா உள்;ளிட்ட பலரும் இதன்போது இணைந்த்pருந்தனர்.