அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள ஜோ பைடனுக்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், பாப்பரசர் பிரான்சிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜோ பைடனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாப்பரசர் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளார். உலகெங்கிலும் அமைதி, நல்லிணக்கம், மனித குலத்தின் பிணைப்பு போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டுமென ஜோ பைடனுக்கு பாப்பரசர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதேவேளை ஏழைகளை கவனித்தல், காலநிலை மாற்றத்தின் நெருக்கடியை நிவர்த்திசெய்தல், புலம்பெயர்ந்தோரை வரவேற்றல் மற்றும் ஒருங்கிணைத்தல், மனித இனத்தின் கௌரவம் மற்றும் சமத்துவம் குறித்து பகிரப்பட்ட நம்பிக்கையை நடைமுறைப்படுத்த பாப்பரசரோடு இணைந்து செயற்படும் தனது விருப்பத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இதேவேளை ஜோன் எப் கெனடிக்கு பின்னர் அமெரிக்காவில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட முதலாவது கத்தோலிக்கர் ஜோ பைடன் என வொய்ஸ் ஓப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.