இலங்கை இராணுவத்தில் புதிய படையணியாக ட்ரோனர் படையணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்ட ட்ரோனர் படையணி இலங்கை இராணுவத்தின் காளாற்படை பிரிவுடன் இணைந்து செயற்படவுள்ளது. நவீன ட்ரோனர் கருவிகளின் உதவியுடன் படையணியின் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. விமான படை மற்றும் கடற்படையினருக்கு தேவையான ஒத்துழைப்புக்களை இதன் ஊடாக பெற்று கொடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கருத்து தெரிவித்தார்.