2020 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியது. நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விவாதத்தை ஆரம்பித்து முன்னர் காணப்பட்ட எந்தவொரு அரசாங்கத்;தை விடவும் தற்போதய அரசாங்கம் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவித்தார். இவை அனைத்து வெற்றிகொள்ளப்படுமென பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
“2020 வருடத்திற்குள் நிதி முகாமைத்துவத்திற்காக 4 இடைக்கால அறிக்கைககள் காணப்பட்டன. அரச சேவைகளை நடாத்திச் செல்வதற்கும், அங்கீகரிக்கப்பட்டுள்ள செலவீனங்களுக்காக ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்குமேன இதனால் முடிகிறது. மக்களின் தெளிவான ஆணையை பெற்றுள்ள அரசாங்கத்திற்கு மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் புதிய வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான சந்த்ர்ப்பங்கள் வரையறுக்கப்படுகின்றன. இதனால் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் தெரிவாகிய பொதுஜன பெரமுன அரசாங்கம் இதற்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கங்கள் முகம்கொடுத்ததை விட பல்வேறு சவால்களுக்க முகம் கொடுத்துள்ளது. தற்போது உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா அச்சுறுத்த்லுக்கு உட்பட்டுள்ளது. இதனால் பாரிய பொருளாதார பின்னடைவுகளுக்கும் உட்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியம் கூட சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்பாராத வகையில் ஏற்பட்ட இரண்டாம் அலை காணமாக மரணங்கள் அதிகரித்த போதிலும் உலகநாடுகளை நோக்கும் போது குறைந்த விகிதாசாரத்திலேயே காணப்படுகின்றது. தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் நாம் முன்னணியில் உள்ளோம். நாடு தழுவிய ரீதியில் சகல பகுதிகளிலும் காணப்படுகின்ற இலவச சுகாதார சேவைகள் மூலம் என்பதை நாம் மறந்து விட முடியாது. இவ்வாறான சிரமமான கால கட்டத்தில் சுகாதார சேவைகளை பலப்படுத்தி எமது நாட்டின் அரச சேவையையும் பாதுகாப்பு தரப்பினர், பொலிசார் மேற்கொள்கின்ற ஆற்றிவரும் சேவையானது மகத்தானவை.”