முகக்கவசம் அணியாது சுற்றிதிரிந்த மற்றும் சமூக இடைவெளியை பேணாத 12 பேர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய அது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 30ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 137 பேர் கைதாகியுள்ளனர். அவர்களுக்கெதிராக எதிர்காலத்தில் வழக்கு தொடரப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் வகையில் மக்கள் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளி பேணலை கடைப்பிடிப்பதும் கட்டாயமாகும். அதை மீறி செயற்படுவர்கள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுவார்களென பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.