மாவட்ட செயலாளர்களின் பொறுப்பில் உள்ள நெல் மற்றும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் என்பனவற்றை அரிசியாக மாற்றி கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் ஊடாக விறப்னை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சந்தையில் அரிசிக்கான தட்டுபாட்டையும் உத்தரவாத விலைக்கு போதுமான அரிசியை வழங்கவும் அரிசி ஆலைய உற்பத்தியாளர்கள் முன்வராமையினால் அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.