அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஊடக சந்திப்பு நேரலை நிறுத்தப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அதில் அவர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததால் அவரது உரையை ஒளிபரப்பிய ஊடகங்கள் இடைநடுவில் நிறுத்தியுள்ளன. ட்ரம்ப், ஜோ பைடன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இதனையடுத்தே அவரது உரை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க ஊடகங்களின் செயற்பாடு மக்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இதேவேளை சட்டப்பூர்வமான வாக்குகள் எண்ணப்பட்டால் தான் இலகுவாக வெற்றிப்பெறுவேன் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 570 வாக்குகளை கொண்ட தேர்தல் கல்லூரி வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார்.
இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் 264 வாக்குகளையும், டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட இன்னும் 6 தேர்தல் கல்லூரி வாக்குகளே அவசியமாகும். இவ்வாறான நிலையில் தன்னால் வெற்றிப்பெற முடியுமென டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது கருத்து சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.