எதிர்வரும் திங்கட்கிழமை முழு நாட்டையும் முழுமையாக திறப்பதற்கு சந்தர்ப்பம் காணப்படுவதாக பிரதி பொலிஸ் மாஅதிபரும் பொலிஸ் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண 110 பொலிஸ் பிரிவுகள் மற்றும் குளியாபிடிய எஹலியகொட பொலிஸ் பிரிவுகளிலும் குருநாகல் நகர சபை எல்லையிலும் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட புலத்கொஹூபிடிய பொலிஸ் பிரிவையும் மற்றும் கலிகமுவ பிரதேச சபை எல்லையையும் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
112 அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊரடங்கு அனுமதி பத்திரமாக அவர்களது நிறுவன அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியுமென்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
112 அரச நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு தமது நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்தி தொழிலுக்கு செல்ல முடியும். அனேகமாக திங்கட்கிழமை நாடு முழுமையாக திறக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு திறக்கப்பட்டால் தற்போதுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டியேற்படும். கொவிட்; தொற்று இருக்கும் இந்த தருணத்தில் கொவிட்டுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.