ஆனமடுவ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி வீதி விபத்தொன்றில் பலியாகியுள்ளார். ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளார்.
ஆனமடுவ கொட்டுக்கச்சிய பிரதேசத்தில் இடம்பெறும் மாடுகளைக் கடத்தும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை அடுத்து குறித்த அதிகாரிகள் இருவரும் அப்பகுதிக்கு பயணித்துள்ளனர். உத்தியோகபூர்வ வாகனம் வேறு கடமைக்காக சென்றிருந்த நிலையில் உயிரிழந்த நிலையப் பொறுப்பதிகாரியின் வாகனத்தில் அவர்கள் பயணித்துள்ளனர். அதன்போது எதிரே வந்த சந்தேகத்திற்கு இடமான லொரி நிறுத்தாமல் சென்றதனால் அதனை துரத்தி சென்றபோது கார் ஆனமடுவ மணிக்கூட்டு கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன்போது ஆனமடுவ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து நிலையப்பொறுப்பதிகாரி ஆர்.எம்.அஜித் ஹேமந்த ரத்நாயக்க உயிரிழந்ததோடு, காயமடைந்த ஊழல் ஒழிப்பு பிரிவின் மற்ற அதிகாரி ஆனமடுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.