தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் உள்ள செயற்பாடுள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரத்மலான, ஹோகந்தர, மீகொடை, வெயாங்கொடை மற்றும் நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையங்களின் செய்பாடு இன்று ஆரம்பமாகியுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர், மேஜர் ஜெனரல் சுமீத பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காகவே திறக்கப்பட்டுள்ள. அங்கு சில்லரை விற்பனைகள் இடம்பெறமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.