அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கணிப்புகளின் படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலையில் உள்ளதாக செய்திகள் வெற்றியாகியுள்ளன. ப்புளோரிடா, எரிசோளா, ஜோஜியா, மிவ்கன், நெவாடா, தெற்கு கரோளினா, பென்சல்வேனியா, வர்ஜீனியா மற்றும் நிவ்ஹெம்ஷெயார் பகுதிகளில் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்பை விட நூற்றுக்கு 9 வீத அதிக வாக்குகளை அவர் பெறுவாரென கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் இன்று உத்தியோக பூர்வ வாக்கெடுப்பு இன்று இடம்பெற்று வருகிறது. ஏற்கனவே 9.5 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். வீதமான மக்கள் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடியரசுக்கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக சட்சி சார்பிர் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுகின்றார். கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. எவ்வாறெனினும் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அமெரிக்க மக்கள் தேர்தலில் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.