மக்களின் நாளாந்த வாழ்க்கையையும் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்காமல் கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளார்.
இதற்கமைய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பத்து நாட்களுக்கு பின்னர் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு பிசிஆர் பரிசோதனை முடிவில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்படுவர்களை 14 நாட்களின் பின்னர் பொது வாழ்க்கையில்ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்;படும்; பிசிஆர் பரிசோதனைகள் சுகாதார அமைச்சின் தீவிர கண்காணிப்பிற்குட்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கடுமையான வரையறைகளுக்குள் முன்னெடுக்கப்பட வேண்டும். கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி அங்கத்தவர்களுடன்; ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்விடயங்களை குறிப்பிட்டார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்ப்ட்டுளள் பிரதேசங்களில் இதற்கு முன்னரை போன்று அத்தியாவசிய உணவு பொருட்கள்pன் விநியோகம் இடம்பெறுமென பொருளாதார புத்தெழுச்சி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார். அமைச்சர்களான பவித்திரா வன்னிpயாராச்சி, டொக்டர் ரமேஷ் பத்திரன உள்ளிட்டோரும் இதன் போது இணைந்திருந்தனர்.
“கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு அறிவித்தல் விடுக்கப்படுகின்றது. இது தவறு அவ்வாறு வைத்தியசாலைக்கு செல்லும் போது அவர்கள் வாகனங்களை பயன்படுத்த வேண்டி ஏற்படும். அத்தோடு பல இடங்களுக்கும் செல்ல வேண்டி ஏற்படும். அந்த முறையை நாம் நிறுத்த வேண்டும். நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக குறித்த நபரும் அவரது குடும்பத்தினரும் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தமக்குஅறிகுறிகள் இருப்பதை தெரியப்படுத்த வேண்டும். அதன் பின்னர் நாம் அ ங்கு சென்று பரிசோதனை மேற்கொள்வதற்காக அவர்களை எமது அம்பியூலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் வைத்தியசாலைகளை நாடும்முறையை நாம் நிறுத்த வேண்டும். அதற்கு மாறாக வீடுகளிலேயே தங்களது சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தி எமக்கு அறிவிக்கும் முறையொன்றை அறிpமுகப்படுத்த வேண்டும். அதன் பின்னர் பரிசோதனை மேற்கொள்ளும் முறையையும் மேற்;கொள்ள வேண்டும். இதுஅரசாங்கத்தினால் பரப்பும் வைரஸ் அல்ல . உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சுகாதார பிரச்சினையாகும். இதனை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களுக்கு பாரிய பொறுப்பிருக்கின்றது. அவர்கள்தமது பொறுப்பை உரியமுறையில் நிறைவேற்றாததன் காரணமாகவே எமக்குஇந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நாம் என்ன செய்கின்றோம் என்பதை தெளிவாக கூற வேண்டும். தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டுமென்று கூறினால் ஏன் இந்த தனிமைப்படுத்தலை மேற்கொள்கின்றோம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். முழு குடும்பமும் ஏன் தனிமைப்படுத்தலுக்குட்பட வேண்டும் என்பதை மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும். 3 நாட்களுக்கு ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தவுடன் எல்லோரும் சுற்று பயணம் செல்கின்றார்கள். இவ்வாறு மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டால் அரசாங்கம் மட்டும் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்த திட்டம் சரியாக முன்னெடுக்கப்படும் அதே நேரம் மக்களும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயல்படவேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டால் பொலிசாரும் பொது சுகாதார பரிசோதகர்களும் வரும் வரை இருந்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறினால் அதில் எந்த பிரயோசனமும் இல்லை.”