அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலின் இறுதி கட்டம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் 59வது ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ளது. இதில் அமெரிக்க மக்கள் தமது நாட்டின் 46வது ஜனாதிபதியை தெரிவுசெய்யவுள்ளனர்.
குறித்த தேர்தலின் ஊடாக அமெரிக்காவின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படவுள்ளது. அந்நாட்டில் ஜனநாயகம் சீர்குழைந்துள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி அதிகாரங்கள் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தவில்லை. ஜனநாயகத்தி;ற்கு மாத்திரமின்றி முழு உலகுக்கும் அச்சருத்தலான ஒரு தலைமைத்துவத்தை அவர் வழங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இன்றைய உலகில் மனித சமுதாயம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. அவற்றுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அதனை மேலும் வீரியமடையச்செய்யும் பணிகளையே ட்ரம்ப் முன்னெடுப்பதாக குறிப்பிடப்படுகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை அமெரிக்க மக்கள் தோல்வியடைய செய்வார்களென நூறு வீதம் நம்ப முடியாது. தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்பதை உறுதியாக கூறமுடியாமல் இருப்பதும் துரதிஷ்டமான ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.