எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிடுமென அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் ராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் அநுராதபுரத்தில் தெரிவித்தனர்.
2 கட்சிகளின் தலைவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இத்தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் சந்திரசேன மற்றும் ராஜாங்க அமைச்சர் ஆகியோர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் தெரிவித்தனர். இவ்விரண்டு கட்சிகளினதும் அநுராதபுர மாவட்ட உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளை அறிவுறுத்தும் நிகழ்வு வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.