கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள 5 நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றை பொலிசார் சுற்றிவளைத்தனர்.
“35 பேர் கொண்ட குழுவொன்று இவ்வாறு திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டதாக கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு இடம்பெற்றது. எனவே தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட குறித்த ஹொட்டலின் நிருவாகத்தினர் மற்றும் இந்த திருமண நிகழ்வை ஏற்பாடு செய்வதவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.”